Pages

மெது வடை

தேவையானவை:

உளுந்து - 1 கப்.
அரிசி மாவு - 1 தே.க.
வெங்காயம் - 10.
பச்சை மிளகாய் - 3.
மிளகு - 1 தே.க.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் - 250 மி.லிட்டர்.
கொத்தமல்லி இலை.

செய்முறை:

  • உளுந்தை மூன்று மணி நேரம் ஊற வைத்து தண்ணீர் சேர்க்காமல் வழவழப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். (குறைவான அளவில் குளிர்ந்த நீரைக் கொண்டு, தெளித்து அரைக்கலாம்.)
  • வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாயை மெல்லியதாக நறுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • மிளகாய் ஒன்றிரண்டாக நசுக்கி வைத்துக் கொள்ள வேண்டும்.
  • அரைத்த உளுந்து மாவுடன் அரிசி மாவு, நறுக்கிய வெங்காயம், கொத்தமல்லி இலை மற்றும் பச்சை மிளகாய், நசுக்கி வைத்துள்ள மிளகு, மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • ஒரு கடையில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கைகளில் தண்ணீர் தொட்டு உளுந்து மாவு கலவையில் சிறிது எடுத்து உள்ளங்கையில் இல்லை, சிறிது தட்டையாக்கி நடுவில் ஒரு துளையிட்டு எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுக்கவும்.
  • தேங்காய் சட்னி அல்லது சாம்பாருடன் பரிமாறவும்.
  • சூடான மெது வடை தயார்.

குறிப்பு:

  • மெது வடையை 15 நிமிடங்கள் சாம்பாரில் ஊறவைத்தால் , அது சாம்பார் வடை.
  • 15 நிமிடங்கள் தயிரில் ஊற வைத்தால் தயிர் வடை .



Recipe Courtesy : Suganya Kannan.

No comments:

Post a Comment