Pages

மசாலாக்கோழி.


தேவையானவை
:


கோழி இறைச்சி - 200 கிராம்.
இஞ்சி வெள்ளைப்பூடு விழுது - 3 தே..
வெங்காயம் - 2.
தக்காளி - 1.
பச்சை மிளகாய் - 4.
மிளகாய்ப்பொடி - 2 தே.க.
கொத்தமல்லிப்பொடி - 2 தே.க.
மஞ்சள் தூள் - 1 தே.க.
மிளகுப்பொடி - 1 தே..
கரம் மசாலாப்பொடி - 1 தே..
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் தேவையான அளவு.
கொத்தமல்லி இலை.

தாளிப்பதற்கு :


கடுகு - 1/2 தே.க.
பெருஞ்சீரகம் - 1/2 தே..
சீரகம் - 1/2 தே.க.
கருவேப்பிலை.

செய்முறை:

  • கோழி இறைச்சியை நன்கு கழுவி மஞ்சள்தூள் மற்றும் உப்பு சேர்த்துஊறவிடவும்.
  • தக்காளி, வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி இலையை நறுக்கி வைதுக்கொள்ளவும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் சிறிது எண்ணெய் ஊற்றி தாளிக்க வேண்டிய பொருள்கள் கடுகு, பெருஞ்சீரகம் மற்றும் சீரகத்தை அதி போட்டு தாளிக்கவும்.
  • பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி வெள்ளைப்பூடு விழுது சேர்த்து அதன் பச்சை வாசணை போகும் வரை நன்கு வதக்க வேண்டும்.
  • பின்பு அதில் நறுக்கி வைத்துள்ள தக்காளி சேர்த்து வதக்கியப்பின், மிளகாய்ப்பொடி மற்றும் கொதமல்லிப்பொடி சேர்க்கவேண்டும்.
  • அதனுடன் ஊறவைத்துள்ள கோழி இறைச்சி சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.(தண்ணீர் சேர்க்கக்கூடாது.)
  • தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு வதக்கி, குறைவான தீயில் அடுப்பை வைத்து மூடி வைக்க வேண்டும்.
  • கடாய் அடிப் பிடிக்காமல் இருப்பதற்கு அவ்வப்போது கறியை நன்கு கிண்டவேண்டும்.
  • இறைச்சி வெந்ததும், மிளகுப்பொடி மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து நன்கு கிளறி அடுப்பை அணைக்க வேண்டும்.
  • சூடான மசாலாக்கோழி தயார்.
  • சப்பாத்தி அல்லது சாதத்துடன் பரிமாறலாம்.


Recipe Courtesy : Suganya Kannan.

No comments:

Post a Comment