தேவையானவை:
முட்டை - 5.
சிகப்பு மிளகாய் - 7.
புளி - நெல்லிக்காய் அளவு.
சீரகம் - 1 தே.க.
வெங்காயம் - 5.
கொத்தமல்லி - 1 தே.க.
தேங்காய்(துருவியது) - 1 தே.க.
மஞ்சள் தூள் - 1/2 தே.க.
உப்பு தேவையான அளவு.
கொத்தமல்லி இல்லை.
எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை:
- வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையை பொடிபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் முக்கால் பங்கு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
- அதனை சூடான கடாயில் ஆம்லெட்களாக சுட்டு எடுக்க வேண்டும். அதனை சிறிது பெரிய அளவிலான துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்.
- தேங்காய், கொத்தமல்லி, சீரகம், சிகப்பு மிளகாய்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரிது வைத்துக் கொள்ளவும்.
- அரைத்த விழுதுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
- ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
- பிறகு அதில் அரைத்த விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நாகு கிளர வேண்டும்.
- அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
- குழம்பு கொதித்ததும் ஆம்லெட் துண்டுகளை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
- கொதித்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
- சூடான ஆம்லெட் குழம்பு கரி தயார்.
No comments:
Post a Comment