Pages

ஆம்லெட் குழம்பு கரி


தேவையானவை:

முட்டை - 5.
சிகப்பு மிளகாய் - 7.
புளி - நெல்லிக்காய் அளவு.
சீரகம் - 1 தே.க.
வெங்காயம் - 5.
கொத்தமல்லி - 1 தே.க.
தேங்காய்(துருவியது) - 1 தே.க.
மஞ்சள் தூள் - 1/2 தே.க.
உப்பு தேவையான அளவு.
கொத்தமல்லி இல்லை.
எண்ணெய் தேவையான அளவு.

செய்முறை:

  • வெங்காயம் மற்றும் கொத்தமல்லி இலையை பொடிபொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
  • புளியை தண்ணீரில் கரைத்து வடிகட்டி வைத்துக் கொள்ளவும்.
  • ஒரு பாத்திரத்தில் முட்டைகளை உடைத்து ஊற்றி அதனுடன் உப்பு மற்றும் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தில் முக்கால் பங்கு சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
  • அதனை சூடான கடாயில் ஆம்லெட்களாக சுட்டு எடுக்க வேண்டும். அதனை சிறிது பெரிய அளவிலான துண்டுகளாக வெட்டி வைக்க வேண்டும்.
  • தேங்காய், கொத்தமல்லி, சீரகம், சிகப்பு மிளகாய்,மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்றாக அரிது வைத்துக் கொள்ளவும்.
  • அரைத்த விழுதுடன் கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கலந்து வைக்க வேண்டும்.
  • ஒரு வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் மீதியுள்ள வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
  • பிறகு அதில் அரைத்த விழுது சேர்த்து அதன் பச்சை வாசனை போகும் வரை நாகு கிளர வேண்டும்.
  • அதன்பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கிளறி கொதிக்க விட வேண்டும்.
  • குழம்பு கொதித்ததும் ஆம்லெட் துண்டுகளை போட்டு இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
  • கொதித்ததும் அடுப்பை அணைத்து கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறவும்.
  • சூடான ஆம்லெட் குழம்பு கரி தயார்.

No comments:

Post a Comment