Pages

கொத்தவரங்காய் குழம்பு கரி


தேவையானவை
:


கொத்தவரங்காய்(நறுக்கியது) - 1 கப்.
தேங்காய்(துருவியது) - 1/4 கப்.
வெங்காயம் - 1.
மஞ்சள் தூள் - 1 தே.க.
கொதமல்லிப்பொடி - 1 தே.க
சிகப்பு மிளகாய் - 3.
கடுகு.
சீரகம்.
வெள்ளைப்பூண்டு -2 பல்.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் தேவையான அளவு.
கருவேப்பிலை.

செய்முறை:

  • வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டை நறுக்கி வைத்துக் கொள்ளவேண்டும்.
  • தேங்காய் துருவல், சிறிதளவு சீரகம், மஞ்சள் தூள் மற்றும் கொதமல்லிப்பொடி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவேண்டும்.
  • கொத்தவரங்காயை உப்பு சேர்த்து தண்ணீரில் வேக வைத்து கொள்ள வேண்டும்.
  • ஒரு கடாயை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, சீரகம், சிகப்பு மிளகாய் மற்றும் கருவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
  • பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் வெள்ளைப்பூண்டு சேர்த்து போநிரமாகும் வரை வதக்க வேண்டும்.
  • அதன்பின் வெந்த கொத்தவரங்காய் மற்றும் அரைத்த மசாலா விழுதை சேர்த்து வதக்க வேண்டும்.
  • தேவையான அளவு உப்பு மற்றும் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.
  • நன்றாக கொதித்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும். சப்பாத்தி, பூரி மற்றும் சாதத்துடன் பரிமாறலாம்.
  • சூடான கொத்தவரங்காய் குழம்பு கரி தயார்.

No comments:

Post a Comment