தேவையானவை:
அரிசி - 2 கப்.
தேங்காய்(துருவியது) - 1 கப்.
சின்ன வெங்காயம் - 5.
பச்சைமிளகாய் - 3.
உப்பு தேவையான அளவு.
எண்ணெய் - 5 தே.க.
கடுகு.
முந்திரி - 6.
கருவேப்பிலை
கொத்தமல்லிஇலை.
செய்முறை:
- அரிசியை கழுவி குழையாமல் பார்த்து வேகவைத்துக் கொள்ளவும்.
- வெங்காயம், பச்சைமிளகாய் மற்றும் கொத்தமல்லி இலைகளை நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- ஒரு வாணலியை அடுப்பில் வைத்து சூடானதும் எண்ணெய் ஊற்றி கடுகை போடவும்.
- கடுகு வெடித்ததும் முந்திரியை போட்டு வதக்கவும்.
- முந்திரி பொன்னிறமானதும் கருவேப்பிலை, பச்சைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்க்கவும்.
- வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும் தேங்காய் துருவல் சேர்த்து இரண்டு நிமிடங்கள் வதக்கவும்.
- பிறகு வேகவைத்த சாதம் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து சாதம் உடையாமல் மெதுவாக கிளறவும்.
- நறுக்கி வைத்துள்ள கொத்தமல்லி இலைகளை தூவி பரிமாறலாம்.
- தேங்காய் சாதம் தயார்.
Recipe Courtesy : Suganya Kannan.
No comments:
Post a Comment